ஆபத்தில் உதவிய ROBOT
அது ஒரு பெரிய தொழில் நிறுவனம். அந்த நிறுவனம் மின் ஆலை (Power Plant) உற்பத்தியில் இருந்தது. அன்று அந்த நிறுவனத்திற்கு திட்டமிடப்பட்ட பராமரிப்பு, அதாவது ஆங்கிலத்தில் SCHEDULED MAINTENANCE என்று சொல்வோம் அல்லவா அது.
அன்றைய தினம் அவர்களுக்கு கெட்ட நேரமோ அல்லது போராத காலமோ தெரியவில்லை. ஒரு 2.5 கிலோ எடையுள்ள சுத்தியல் அந்த நிறுவனத்துடைய உயர் அழுத்த நீராவி பைப்பில் (HIGH PRESSURE STEAM PIPE) விழுந்தது. அந்த சுத்தியலை எப்படி எடுப்பது என்று அவர்களுக்கு புரியவில்லை. அந்த சுத்தியலை எடுக்கும் வரை மின் ஆலை உற்பத்தியை தொடங்க முடியாது. அந்த சுத்தியல் எந்த இடத்தில் சென்று மாட்டிகொண்டு இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதன்பிறகு அதை வெளியே எடுப்பதற்கு வழி காண வேண்டும். என்ன செய்வது என்றே பணியாளர்களுக்கு புரியவில்லை. அது வரை ஆலை உற்பத்தியை தொடங்க இயலாது. அத்தனை நாள் நிறுவனம் வருமான இழப்பை சந்திக்க நேரிடும்.
இடை நிலை பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தனர். உடனே அவர்கள் தொழில் நுட்ப அதிகாரிகளை கூப்பிட்டு இந்த விபத்தை எப்படி சரி செய்வது என்று விவாதிக்க ஆரம்பித்தனர். தொழில் நுட்ப அதிகாரிகள் பலவாக யோசித்தனர். கடைசியாக ஒரு வழியை கண்டு பிடித்தனர். அதாவது அந்த சுத்தியல் எந்த இடத்தில் மாட்டி கொண்டு இருக்கிறதோ அந்த இடத்தில் உள்ள பைப்பை வெட்டி உள்ளே இருக்கும் சுத்தியலை எடுக்க வேண்டும். மீண்டும் வெட்டிய பைப்பை சரியாக்க வேண்டும்.
சரி இதை செய்வதர்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று மேலாண்மை பிரிவு (Management Department) தொழில் நுட்ப அதிகாரிகளிடம் வினவினர். அதற்கு அவர்கள் தோராயமாக ரூபாய் 5 கோடி செலவாகும் என்று கூறினர். அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் நாம் ரோபோவின் உதவியுடன் அந்த சுத்தியலை எடுக்க கூடாது என்று. அதை அவர் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேல் அதிகாரிகளும், கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு இதுவும் நல்ல யோசனையாக தான் தெரிகிறது முயற்சித்து பார்ப்போம் என்று முடிவு எடுத்தனர். Robot தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நடந்த விபத்தினை பற்றி தகவல் பரிமாறினார்கள். அந்த நிறுவனமும் விபத்து நடந்த நிறுவனத்திர்க்கு செல்லும் முன் தங்களுடைய ரோபோட்டை சில மாற்றங்கள் செய்து சோதனை செய்தது. பிறகு விபத்து நடந்த நிறுவனத்திற்கு ரோபாட்டை எடுத்து கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் சவால் காத்திருந்தது. அந்த ரோபோட் நேர்கோட்டில் உள்ள பைப்பில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு ஏற்றவாறு இருந்தது. உதாரணத்திற்கு ஆள் குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை நேர்வாக்கில் உள்ள பைப்பில் இருந்து எப்படி எடுப்போமோ அவ்வாறு இருந்து. ஆனால் இங்குள்ள பைப்புகளில் பல பெண்டுகள். எல்லாம் 90 டிகிரி கொண்ட பெண்டுகள். அந்த பெண்டுகளை எல்லாம் கடந்து சுத்தியலை எடுக்க வேண்டும்.
ரோபாட்டை எடுத்து வந்த தொழில் நுட்ப அதிகாரிகள், ரோபோட்டில் சில மாறுதல்களை செய்து அந்த சுத்தியலை எடுக்க முற்பட்டனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சுத்தியலை வெற்றிகரமாக எடுத்தனர். அதற்கு அவர்கள் வசூலிக்க பட்ட கட்டணம் ரூபாய் 16 லட்சம். குறைந்தது 5 கோடி செலவு மற்றும் தோராயமான 5 கோடி வருவாய் இழப்பையும் சேர்த்தால் 10 கோடி அளவிளான செலவுக்கு வெறும் 16 லட்சத்தில் ரோபோட்டின் உதவியுடன் இந்த பிரச்சினையில் இருந்து அந்த நிறுவனம் வெளிவந்தது.
இந்த சம்பவம் வேறு எங்கும் நடக்கவில்லை, நம் இந்தியாவில் 2017 ஆம் வருடம் தான் நடந்தது. அந்த விபத்திர்க்கு உள்ளான நிறுவனம் குஜராத்தில் இயங்கி கொண்டிருந்த "TATA POWER PLANT". அந்த ரோபோட் தயாரிக்கும் நிறுவனம், அகமதாபாதில் இயங்கி கொண்டிருக்கும் "GRID BOTS TECHNOLOGIES".